Friday, 3 June 2011

ராணா படம் கைவிடப்படும்…

உச்ச நடிக‌ரின் உடல்நிலை தேறி வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை‌த் தந்திருக்கிறது. என்றாலும் ஆறு மாதங்களுக்கேனும் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த‌க் கால அளவு கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை.
இந்த உண்மையின் அடிப்படையில் அவரது ச‌ரித்திரப் படம் அனேகமாக கைவிடப்படவே சாத்தியம் அதிகமுள்ளது. அதுபற்றி எழுதிய பத்தி‌ரிகைகளின் மீது படத்தின் இயக்குனரும், உச்சத்தின் குடும்பமும் கடும் கோபத்தில் உள்ளனர்.
ச‌ரித்திரப் படம் மிக‌ப் பெ‌ரிய பட்ஜெட்டில் திட்டமிட்டுள்ளது. உச்சம் ஆறு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதும், படம் கைவிடப்படும் என்பதும் படத்துக்கு பணம் போடுகிறவர்களை யோசிக்க வைக்கும், அவர்கள் இந்தப் படத் தயா‌ரிப்பிலிருந்து பின்வாங்கவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உச்சத்தின் குடும்பமும், இயக்குனரும் பத்தி‌‌ரிகைகள் மீது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மை எப்போதும் கசக்கும்தானே.

No comments:

Post a Comment