தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலில் குவிந்துள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் வரையிலும், ரூ. 300 கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரமும் ஆகிறது.
அன்னதான கட்டிடம், மொட்டை போடும் இடம், லட்டு கவுண்டர் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கி இருந்தனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஏராளமான அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் வரையிலும், ரூ. 300 கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரமும் ஆகிறது.
அன்னதான கட்டிடம், மொட்டை போடும் இடம், லட்டு கவுண்டர் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கி இருந்தனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஏராளமான அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment